பிறரிடத்தில் கருணை காட்டுங்கள்.. தன்னலமற்ற செயல் மூலம் மனிதருக்கு பாடம் கற்பிக்கும் நாய்கள்- வீடியோ
டெல்லி: ஒரு நீச்சல் குளத்தில் தவறி விழுந்த வெட்டுக்கிளியை அது மூழ்கிவிடாமல் நாய் ஒன்று வாயால் கவ்வி காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
விலங்குகள் நமக்கு ஏராளமானவற்றை சொல்லித் தருகின்றன. அவை நமக்கு சிறந்த ஆசான்களாக திகழ்கின்றன. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் செயலை எந்த வித தயக்கமும் இன்றி அவை செய்கின்றன.
தற்போது சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு நீச்சல் குளம் இருக்கிறது. அதில் நாய் ஒன்று வருகிறது.
கொரோனா மர்மத்துக்கு விடை? குழந்தைகளும் இடம் பெறும் செகண்ட் செரோ-சர்வே.. ஐசிஎம்ஆர் செம்ம பிளான்!
தண்ணீரிலிருந்து
பார்ப்பதற்கு தண்ணீர் குடிப்பது போல் உள்ளது. ஆனால் சில வினாடிகள் கழித்து பார்த்தால் தண்ணீரிலிருந்து நாய் எதையோ எடுப்பது போல் உள்ளது. வாயில் கவ்வியபடி எதையோ எடுத்து தரையில் போடுகிறது. அது என்னவென பார்த்தால் வெட்டுக்கிளி. ஆம், பறந்து கொண்டிருந்த வெட்டுக்கிளி நீச்சல் குளத்தில் தவறி விழுந்துவிட்டது.
காப்பாற்றிய நாய்
இதை கண்ட நாய் ஓடி வந்து அதை காப்பாற்றியுள்ளது. வெட்டுக்கிளியை தரையில் போட்டுவிட்டு நாய் நடையை கட்டிய போது உடனே நின்று அந்த வெட்டுக்கிளி உயிருடன் இருக்கிறதா என உறுதி செய்து கொண்டு செல்கிறது. இது மிகவும் பாராட்டுதலுக்குரிய வீடியோ. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நாயை வெகுவாக பாராட்டி வருகிறார்.
தலைவணங்குதல்
நாய்கள் மனிதர்களை காட்டிலும் இரக்க குணம் கொண்டவைகள் என ஒரு வலைஞர் கூறுகிறார். நாய்கள் கடவுளிடம் இருந்து கிடைத்த பரிசு என்கிறார் ஒருவர். இன்னொருவர் எனக்கு அந்த நாய் வேண்டும் என கேட்கிறார். நாய்க்கு தலைவணங்குகிறோம் என்கிறார் இன்னொரு வலைஞர்.
Grasshopper saved from drowning. pic.twitter.com/tUUEb8fsUR
— Earth's Beauty (@PhysicsAndAstr1) August 26, 2020
முயற்சி
நேற்றைய தினம் ஒரு வீடியோ வைரலானது. இதே நாய் குறித்த வீடியோதான் அது. ஒரு குட்டி குரங்கு விளையாடி கொண்டிருந்த போது கீழே கிடந்த ஒரு பெரிய மரக்கட்டையில் இருந்த ஒரு துளையில் விழுந்து அதன் உடல் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து வெளியேற குரங்கு எவ்வளவோ முயற்சித்தும் அது முடியவில்லை.
குட்டி குரங்கு
இறுதியாக ஒரு நாய் வந்து அந்த குட்டி குரங்கின் தலையை கவ்வியபடி அதை வெளியே எடுக்கிறது. இந்த வீடியோ வைரலானது. ஆனால் இந்த வீடியோவை எடுத்தவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவிட்டார்கள். குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற நாய்க்கு இருந்த எண்ணம் கூட இந்த மனிதனுக்கு இல்லாமல் வீடியோ எடுத்திருக்கிறாரே என சமூகவலைதளமே பொங்கியது!