ஊரடங்கே முடியவில்லை.. அதற்குள் அதிரடி.. மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கம்
டெல்லி: இந்தியாவில் மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கும் என்று மத்திய சிவில் ஏவியேஷன் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியா முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கிறது. அப்படி இருந்தும் திடீரென ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு, முன்பாகவே, அதாவது, மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அனைவரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜூன் முதல் உள்நாட்டு விமான சேவை.. புக்கிங்கை திறந்த தனியார் விமான நிறுவனங்கள்
படிப்படியாக விமான போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் பயணிகள் மத்தியில் இதற்கு எந்தவிதமான எந்த மாதிரி வரவேற்பு கிடைக்கும் என்பது சந்தேகத்திற்கிடமாக உள்ளது.
ஏனெனில், பெங்களூர், ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பஸ் போக்குவரத்து துவங்கிய போதிலும், போதிய அளவுக்கு பயணிகள் வருகை தரவில்லை. அப்படி இருக்கும்போது குளிர்சாதன வசதி கொண்ட விமானங்களை மக்கள் நாடுவார்களா, என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.