ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம்...நிலவரமே தெரியாமல் பேசும் ஸ்டாலின்.. டாக்டர் ராமதாஸ் 'குட்டு'
சென்னை: ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் தொடர்பாக நிலவரமே தெரியாமல் பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.
1. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.
— Dr S RAMADOSS (@drramadoss) October 13, 2019
இந்த உண்மை கூட தெரியாமல் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வன்னியர் தலைவர் குறித்த நிகழ்கால நிலவரம் கூட தெரியாத இவர் தான் வன்னியர் நலனைக் காப்பாற்றப் போகிறாராம். இது தான் காலக் கொடுமை போலிருக்கிறது!
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.