கேம் சேஞ்சர்? கொரோனாவுக்கு எதிரான புதிய மருந்து.. 2dg எப்படி வேலை செய்கிறது? வெளியான சூப்பர் தகவல்
டெல்லி : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான மருந்து (கோவிட் -19), ஓராண்டு சோதனைகளுக்குப் பிறகு அவசரகால பயன்பாட்டிற்கான ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது.
Recommended Video
இதனால் கொரோனா வைரஸ்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முக்கிய முன்னேற்றத்தை இந்தியா கண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
ஆம்.. கொரோனா வைரஸ் காற்றில் பரவும்.. ஒ்ப்புக்கொண்டது அமெரிக்க நோய் கட்டுப்பாடு அமைப்பு
ஆக்ஸிஜன் தேவை கொரோனா நோயாளிகளுக்கு உச்சம் பெற்று வரும் நிலையில், புதிய டிஆர்டிஒ தடுப்பு மருந்து நோயாளிகளை இயல்பாக சுவாசிக்க வைக்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன் அர்த்தம் என்ன
கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு முக்கிய முன்னேற்றத்தை கண்டறிந்துள்ளது. டிஆர்டிஓவின் கொரோனா தடுப்பு மருந்து மருத்துவ ஆக்ஸிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கும் மருந்தின் சிகிச்சை பயன்பாட்டை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
மருந்தின் செயல்திறன் எப்படி
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற மருந்து உடலில் நுழையும் போது, அது வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களுக்குள் குவிந்துவிடும். அங்கு சென்றதும், அது வைரஸின் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற எதிர்வினைகளை நிறுத்தி, பெருக்கவிடாமல் தடுக்கிறது. டிஆர்டிஓ மருந்து "வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து" செயல்புரிவதாக கூறப்படுகிறது. இது எவ்வாறு நுகரப்படுகிறது?: மருந்து தூள் வடிவில் வருகிறது மற்றும் அதை தண்ணீரில் கரைத்து வாய்வழியாக எடுக்க வேண்டும்.
கேம்சேஞ்சர்?
இந்த மருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்துவதோடு மருத்துவ ஆக்ஸிஜனைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். மருத்துவமனை சோதனைகளில், 42% நோயாளிகளுக்கு தினசரி இரண்டு சாக்கெட் மருந்துகளை வழங்கினர், மூன்றாம் நாளுக்குள் ஆக்ஸிஜன் ஆதரவு இல்லாமல் சுவாசிக்கும் அளவுக்கு சாதாரண நிலையை அடைகின்றனர். ஆனால் இப்போது தரப்படும் நிலையான சிகிச்சையின் கீழ், 3 நாளில் 30% நோயாளிகளே ஆக்ஸிஜன் ஆதரவின்றி சுவாசிக்கும் நிலைக்கு வருகிறார்கள்.
சிகிச்சை முறை
இந்த மருந்து மிதமான மற்றும் கடுமையான கோவிட் நிகழ்வுகளில் பயனுள்ளதாகக் கண்டறியப்பட்டாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்தும் நன்றாக வேலை செய்கிறது, இது ஒரு துணை சிகிச்சையாக அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது அதிசயமான சிகிச்சை முறை அல்ல. மற்ற சாத்தியகூறுகளை உள்ளடக்கிய சிகிச்சை நெறிமுறையின் ஒரு பகுதியாக இருக்கும்.
விலை என்ன
விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஒவ்வொரு சச்செட்டிற்கும் ரூ .500-600 செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-DG மருந்தை எளிதில் வெகுஜன உற்பத்தி செய்ய முடியும் என்று டிஆர்டிஓ கூறுகிறது. இந்த திட்டத்தின் டிஆர்டிஓவின் தொழில்துறை கூட்டாளியான டாக்டர் ரெட்டியின் ஆய்வகம் ஏற்கனவே மருத்துவமனைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மருந்துகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இது இப்போதைக்கு விற்பனைக்க கிடைக்காது.