நடுங்கிய லடாக்.. 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. கார்கில் அருகே மையப்புள்ளி
டெல்லி: லடாக் பகுதியில், ஓரளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று, இரவு 8:15 மணியளவில் பதிவாகியுள்ளது. நில நடுக்க அளவு ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக அளவிடப்பட்டுள்ளது. கார்கிலிலிருந்து வடமேற்கே 200 கி.மீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ளது.
பூமியின் மேற்பரப்பிலிருந்து, 25 கி.மீ ஆழத்தில் மையப்பகுதி அமைந்துள்ளது. இதுவரை, இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது எந்தவிதமான உயிரிழப்புகள் தொடர்பாகவோ இதுவரை தகவல் இல்லை.
மேற்கு வங்கத்தையடுத்து அடுத்த மாநிலம்.. ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்த ஜார்கண்ட்
Recommended Video
ஏற்கனவே இன்று, மேகாலயாவில் நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.3 என்று அளவிடப்பட்டது. மேகாலயாவில் துராவுக்கு மேற்கே 79 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. டெல்லி-என்.சி.ஆரிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 2.8 ஆக இருந்தது. ஹரியானாவின் ரோஹ்தக் அருகே இது மையம் கொண்டிருந்தது.