பீகாரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு! நவ.10-ல் வாக்கு எண்ணிக்கை!!
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேர்தலில் நடைபெறு என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். மேலும் 3 கட்டங்களில் பதிவான மொத்த வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
பீகாரில் சட்டசபை பதவிக்காலம் நவம்பர் 29-ந் தேதி முடிவடைவதால் பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.
டெல்லியில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 3 கட்டங்களாக பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். முதல் கட்ட் வாக்குப் பதிவு அக்டோபர் 28ந-ந் தேதி நடைபெறும்; 2-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 3, 3-வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும். 3 கட்டங்களில் பதிவான அனைத்து வாக்குகளும் நவம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
எஸ்பிபி: எப்படியாவது மீண்டுடுவார் என நம்பினோமே.. எல்லா பிரார்த்தனையும் வீணாகிடுச்சே: ரசிகர்கள் கதறல்
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி அக்.8 வரை நடைபெறும். முதல் கட்டத்தில் மொத்த 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ல் வாக்குப் பதிவு நடைபெறும்.
2-வது கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்.9 முதல் அக்.16 வரை நடைபெறும். மொத்தம் 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 3-வது கட்டமாக அக்டோபர் 13-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். மொத்தம் 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இதனையடுத்து பீகாரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன..