டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடிக்கு எதிரான விதி மீறல் புகார்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது!

பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக அளிக்கப்பட்ட தேர்தல் விதிமுறை மீறல் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக 6 தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல் செய்ததாக புகார் உள்ளது.

பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது பாலக்கோடு தாக்குதல், அபிநந்தன் குறித்து பேசியது, இஸ்லாமியர்கள் குறித்து பேசியது, மைனாரிட்டி என்று தாக்கி பேசியது ஆகியவை குறித்து புகார்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் அமித் ஷா கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

ரம்ஜான் நோன்பு.. அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்! ரம்ஜான் நோன்பு.. அதிகாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நடத்த முடியாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

வழக்கு தொடுத்தார்

வழக்கு தொடுத்தார்

இது அத்தனையும் தேர்தல் விதிமுறைப்படி தவறானது ஆகும். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. 6 புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் சார்பாக எம்.பி சுஷ்மிதா தேவ் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

என்ன உத்தரவு

என்ன உத்தரவு

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மோடி, அமித் ஷா மீதான புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அந்த நடவடிக்கை குறித்து இன்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

என்ன முடிவு

என்ன முடிவு

இந்த நிலையில் மோடி மற்றும் அமித் ஷா அளிக்கப்பட்ட 6 புகார்களிலும் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இவர்கள் மீது தவறு இல்லை என்று நீதிமன்றம் கூறியது. இதுகுறித்த அறிக்கையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. ஆனால் இந்த அறிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏன் கவனம்

ஏன் கவனம்

இதுகுறித்து காங்கிரஸ், உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணைய நடவடிக்கையை கவனமாக விசாரிக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த விதிகளை கவனமாக ஆராய வேண்டும். அதனால் நாளை மறுநாள் இந்த வழக்கை விசாரியுங்கள் என்று காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

English summary
ECI files their reply to SC on MCC complaints against PM Modi and BJP chief Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X