சமுதாயத்தில் அமைதி பெருகட்டும்.. பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி டிவிட்!
பக்ரீத் பண்டிகையை அடுத்து பிரதமர் மோடி நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: பக்ரீத் பண்டிகையை அடுத்து பிரதமர் மோடி நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள் எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஏப்ரல் 12ம் தேதியான இன்று இந்தியாவில் நாடு முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் சென்று இஸ்லாமியர்கள் தொழுது, புது ஆடை உடுத்தி பண்டிகையை கொண்டாடினார்கள்.
இஸ்லாமியர்களால் இந்த பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தமிழில் 'தியாகத் திருநாள்' என்றும், அரபியில் 'ஈத் அல்-அதா' என்றும் அழைப்பது வழக்கம்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தற்போது இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார். அவர் தனது வாழ்த்தில், பக்ரீத் நாளில் மக்கள் எல்லோருக்கும் என்னுடைய சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
My best wishes on the occasion of Eid al-Adha. I hope it furthers the spirit of peace and happiness in our society. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) August 12, 2019
இதன் மூலம் நமது சமுதாயத்தில் அமையும், சந்தோஷமும் அதிகம் ஆகும் என்று நம்புகிறேன். பக்ரீத் வாழ்த்துகள் என்று மோடி குறிப்பிட்டு உள்ளார்.