இனிமே கெடுபிடி இருக்காது.. நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகளை விலக்கியது தேர்தல் ஆணையம்!
டெல்லி: நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் விலக்கிகொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் மே 26ஆம் தேதி முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த 2 மாதங்களாக நாடு முழுவதும் நீடித்து வந்த தேர்தல் விதிமுறைகள் விலக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வழக்கமான நலத்திட்ட அறிவிப்புகள், நலத்திட்டங்கள் வழங்குவது, உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என தெரிகிறது.
இதேபோல் வாகன தணிக்கை உள்ளிட்டகெடுபிடிகளும் இருக்காது என தெரிகிறது.