வேலையின்மை தலைவிரித்தாடுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா மக்களே?
டெல்லி: ரயில்வேயில் கடை நிலை பதவிகளில் பணியாற்ற பொறியாளர்கள், முதுகலை பட்டதாரிகள் என விண்ணப்பித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் பணியாற்ற கேங்க்மேன், கேபின்மேன், ஹெல்பர்கள், கீ மேன், டிராக்மேன் மற்றும் வெல்டர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியே 10-ஆம் வகுப்பு தேர்ச்சிதான்.
கடைநிலை பதவிகளான இந்த வேலைகளுக்கு 2 கோடி விண்ணப்பங்களை ரயில்வே நிர்வாகம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் 4.91 லட்சம் பொறியாளர்களும், 41 ஆயிரம் முதுகலை பொறியாளர்களும் விண்ணப்பித்துள்ளனர். மேலும் முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகள் 86000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தரமற்ற உணவுப்பொருள்.. சென்னை போரூர் அஞ்சப்பர் உணவகத்துக்கு தடை விதித்த உணவுத் துறை
வெறும் 18ஆயிரம் சம்பளத்துக்கு இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளதால் ரயில்வே நிர்வாகம் செய்வதறியாது திகைத்துள்ளது. இத்தனை விண்ணப்பங்களில் 75,500 பேரை தேர்வு செய்துள்ளது.
கடைநிலை வேலைக்கு இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளதைவிட வேலையின்மைக்கு வேறு எதையும் சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியாது.