பொறுப்புள்ள குடிமகன் நான்.. ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன்- ப.சிதம்பரம்
Recommended Video
டெல்லி: பொறுப்புள்ள குடிமகனான நான் ஜாமீன் கிடைத்தாலும் வெளிநாடு செல்ல மாட்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் 15 நாட்கள் சிபிஐ காவலில் ப. சிதம்பரம் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவரது ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை திகார் சிறையில் 19-ஆம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். அப்போது சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால் ஆதாரங்களை அழித்து விடுவார் என்றும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடுவார் என்றும் கூறி சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கர்கள் இல்லாமல் தமிழக வளர்ச்சி இல்லை.. நான் தமிழன் அல்ல.. அதிர வைத்த ராதாரவி
அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் சார்பில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வேன் என சிபிஐ கூறுவது தவறு. நாடாளுமன்ற உறுப்பினர், பொறுமிக்க குடிமகன் என்பதால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தனது மனுவில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.