மிசோராமில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் தெரியுமா? எக்சிட் போல் முடிவுகள் இதோ
டெல்லி: காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மிசோராம் மாநிலத்தில், அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது குறித்து எக்சிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியும், மிசோராமில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி நடத்தின.
டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் நடத்திய, மிசோராம் எக்சிட் போல் முடிவு: மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 16 தொகுதிகளை வெல்லும். மிசோ நேஷனல் ப்ரன்ட் கூட்டணி 18 தொகுதிகளை வெல்லும். பிறர் 6 தொகுதிகளை வெல்வார்க்ள். பாஜக கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைக்காது.
ரிபப்ளிக் டிவி-சிஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு: காங்கிரஸ் கூட்டணி 14-18 தொகுதிகளை வெல்லும். மிசோ நேஷனல் ப்ரன்ட் கூட்டணி 16-20 தொகுதிகளை வெல்லும். பிறர் 3-10 தொகுதிகளை வெல்ல கூடும். பாஜகவிற்கு ஒரு இடமும் கிடையாது.
இந்தியா டுடே-ஆக்சிஸ் எக்சிட் போல் முடிவுகள்: காங்கிரஸ் கூட்டணி 8-12 தொகுதிகளையும், மிசோ நேஷனல் ப்ரன்ட் கூட்டணி 16-20 தொகுதிகளையும், பிறர் 8-12 தொகுதிகளையும் வெல்லக்கூடும்.