ராஜஸ்தான், சட்டிஸ்கரில் ஆட்சியமைக்கிறது காங்.. ரிபப்ளிக் சிவோட்டர் எக்சிட் போல்
டெல்லி : ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கை ஓங்கியிருப்பதாக ரிபப்ளிக் சி வோட்டர் எக்சிட் போல் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக ரிபப்ளிக் சி வோட்டர் வெளியிட்டுள்ள எக்சிட் போல் முடிவுகள்:
காங்கிரஸ் 129 முதல் 145 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும். பாஜக 52 முதல் 68 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளது. மற்றவர்கள் 5 முதல் 11 இடங்களை பிடிப்பர் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டிஸ்கர் தேர்தலில் காங்கிரஸ் 46 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று ரிபப்ளிக் சி வோட்டர் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக, பாஜகவுக்கு 39 தொகுதிகளும் மற்றவர்களுக்கு 5 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இன்று வெளியான எக்சிட் போல்களில் ராஜஸ்தானில் காங்கிரஸ்தான் வெல்லும் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உறுதிபடத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.