என்னாது.. இந்தியாவில் இன்டெர்நெட் சேவையை முடக்கப்போகிறார்களா? வைரலாக சுற்றும் பதிவு.. உண்மை என்ன?
டெல்லி: கொரோனா வைரஸ் லாக்டவுனால் இணையதள சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு போலி மெசேஜ் பரவி வருகிறது.
இணைய சேவைகளை நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதாக சமூக ஊடகங்களில் வரும் அந்த செய்தி கூறுகிறது. ஆனால், அத்தகைய உத்தரவு எதுவும் போடப்படவில்லை, என்றும் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த செய்தி போலியானது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் OTT தங்கள் நிறுவனங்களின் அலைவரிசை துல்லியத்தன்மையை குறைக்குமாறு கேட்டதாக செய்திகள் வந்தன. லாக்டவுன் காரணமாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்கள் அதிகரித்துள்ளனர். வீட்டில் மொத்தமாக பலரும் இணையதளத்தையே தங்கள் பொழுது போக்கிற்கு நம்புகிறார்கள். இதன் காரணமாக உருவாக்கப்பட்ட கூடுதல் இணையதள டிராபிக்கின் சுமையை குறைக்க இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் அழுத்தத்தில் இருப்பதால் பல OTT நிறுவனங்கள், இதற்கு ஒப்புக்கொண்டன. இவ்வளவுதான் விஷயம். இணையதள சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
டெல்லி: கொரோனா வைரஸ் லாக்டவுனால் இணையதள சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு போலி மெசேஜ் பரவி வருகிறது.
இணைய சேவைகளை நிறுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதாக சமூக ஊடகங்களில் வரும் அந்த செய்தி கூறுகிறது. ஆனால், அத்தகைய உத்தரவு எதுவும் போடப்படவில்லை, என்றும் அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த செய்தி போலியானது என்று அரசாங்கம் கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் OTT தங்கள் நிறுவனங்களின் அலைவரிசை துல்லியத்தன்மையை குறைக்குமாறு கேட்டதாக செய்திகள் வந்தன. லாக்டவுன் காரணாக, வீட்டிலிருந்து வேலை செய்யும் நபர்கள் அதிகரித்துள்ளனர். வீட்டில் மொத்தமாக பலரும் இணையதளத்தையே தங்கள் பொழுது போக்கிற்கு நம்புகிறார்கள். இதன் காரணமாக உருவாக்கப்பட்ட கூடுதல் இணையதள டிராபிக்கின் சுமையை குறைக்க இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
Recommended Video
தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் அழுத்தத்தில் இருப்பதால் பல OTT நிறுவனங்கள், இதற்கு ஒப்புக்கொண்டன. இவ்வளவுதான் விஷயம். இணையதள சேவைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.