மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி- விவசாயிகள் அடுத்த அதிரடி
டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் அமைதியாக நடைபெற்று வருகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதனையடுத்து மத்திய அரசின் விவசாய சட்டங்களை செயல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் குடியரசு தின நாளில் டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணியை செவ்வாய்க்கிழமையன்று விவசாயிகள் நடத்துகின்றனர்.
இதற்கு அடுத்ததாக, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அதிரடியாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
Comments
agri laws budget 2021 delhi farmers protest parliament விவசாய சட்டங்கள் வேளாண் சட்டங்கள் டெல்லி பட்ஜெட் 2021 நாடாளுமன்றம் விவசாயிகள் விவசாயிகள் போராட்டம்
English summary
Protesting Farmers today Announced that they will march to Parliament on Budget Day.
Story first published: Monday, January 25, 2021, 20:47 [IST]