சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது - நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதனால் பல்வேறு துறைகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவில் உள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால்தான் இது போன்ற பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொருளாதார மந்த நிலையை சரி செய்ய வங்கிகள் இணைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி
இன்று டெல்லியில் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாட்டில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே விலைவாசி ஏறவில்லை. தொழில்துறை உற்பத்தியின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறி தெரிகிறது.

வட்டி குறைப்பு
ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. செப்டம்பர் 19-ஆம் தேதி பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளேன். நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் மிக பிரகாசமாக தெரிகின்றன.

சீர்திருத்தம்
நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும்; உற்பத்தி தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளன. வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. ஏற்றுமதிக்கு 6 விதமான வரிச்சலுகை அளிக்க முடிவு செய்துள்ளோம். ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி குறைப்பு 2020 ஜனவரியில் அமலாகும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
ஓலா, ஊபர் பயன்பாட்டினால்தான் வாகன உற்பத்தி மந்த நிலையில் இருக்கிறது என நிர்மலா சீதாராமன் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications