இதுதான் ஆரோக்கியமான அரசியல்.. மன்மோகன் சிங்கை சந்தித்த நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மரியாதை நிமித்தமாக இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பட்ஜெட் குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக உள்ளார். கடந்த முறை பாதுகாப்பு துறை அமைச்சராகஇருந்த நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி அமைச்சராக மறுத்த காரணத்தால் நிதியமைச்சர் ஆகி உள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை வரும் ஜுலை 8ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதனால் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
என்ன ஆச்சு தமிழிசைக்கு.. ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்.. தேர்தல் தோல்வி இப்படியெல்லாமா மாற்றும்!
இதை தொடர்ந்து பொதுமக்களிடமும் கருத்து கேட்டு நிதியைமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் இருந்தும் பல்வேறு யோசனைகளை கேட்டு வருகிறார்.
இந்த சூழலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, நிர்மலா சீதாராமன் அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார். அப்போது பட்ஜெட் குறித்து ஆலோசனைகளை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மரியாதை நிமித்தமாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நெட்டினசன்கள் பலர் இது ஆரோக்கியமான அரசியல் என்று பாராட்டி உள்ளார்கள். நிதித்துறை அனுபவம் மிக்க மன்மோகன் சிங்கை சந்தித்து மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசித்ததை பாராட்ட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.