மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்வு.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
டெல்லி: மாநிலங்களுக்கான கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு குறித்து விரிவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த 4 தினங்கள் பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை வழங்கிய அவர் இன்று இறுதி அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ,40,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் தொற்றுநோய் தடுப்பு மையங்கள்.. தாலுகா அளவில் சுகாதார ஆய்வகங்கள்.. நிர்மலா சீதாராமன்
Recommended Video
மாநிலங்கள் கடன் பெறும் வரம்பு ஜிடிபியில் 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 4.28 லட்சம் கோடி கூடுதலாக நிதி மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.