நள்ளிரவில் பரபரப்பு... டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் 9ஆவது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்து குறித்துத் தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்கும் பணிகளில் 22 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்தத் தளத்தில் நோயாளிகள் யாரும் இல்லை என்றும் இந்தத் தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை
மருத்துவமனையின் கன்வர்ஜென்ஸ் பிளாக்கில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இங்கு தான் பல நோய் கண்டறிதல் ஆய்வகங்கள் மற்றும் பரிசோதனை பிரிவுகள் உள்ளன. இந்தத் தீவிபத்து எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இந்தத் தீ விபத்திற்கான காரணத்தை விசாரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.