இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல்… 5 பாகிஸ்தான் வீரர்கள் சாவு
Recommended Video
டெல்லி: இந்திய விமானப்படை தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது
கடந்த 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் படைவீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய விமான படை பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது .
இந்த தாக்குதலில் 200 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், பாகிஸ்தான் படை வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் எத்தகைய மோதலையும் சந்திக்க இந்திய ராணுவமும் தயாராக உள்ளது.
எல்லை தாண்டிய இந்திய விமானப் படையின் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசியதாவது: பாகிஸ்தானை தனிமைபடுத்த முயற்சிக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார். மேலும் இந்தியா போர் தொடுக்க நினைத்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது என தெரிவித்தார்.