மறைந்தார் சுஷ்மா சுவராஜ்.. மறக்க முடியாத பாஜக தலைவர்!
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்.
எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.
வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டும் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார். பாஜகவை சேர்த்த பெண் தலைவர்களில் இவர் முக்கியமான தலைவர்.
வலிமையான தலைவராக செயல்பட்டு அனைவரிடமும் நற் பெயர் சம்பாதித்தவர். கட்சி கடந்து பல அரசியல் தலைவர்களிடம் இவர் நெருக்கமாக பழகி இருக்கிறார். வயது காரணமாக இந்த முறை இவர் லோக்சபா தேர்தலில் நிற்கவில்லை.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
இந்த நிலையில் இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுஷ்மா சுவராஜ் மரணமடைந்தார்.
அவரது மறைவுச் செய்தி கேட்டதும் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர்.