முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று!!
டெல்லி: முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், ''நான் மருத்துவமனைக்கு வேறு பரிசோதனைகளுக்கு சென்று இருக்கும்போது எனக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை தொடர்பு கொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
English summary
Former President of India Pranab Mukherjee has infected with Coronavirus
Story first published: Monday, August 10, 2020, 13:50 [IST]