‘மிக நீண்ட பட்ஜெட். என்னால் உட்கிரகிக்க முடியவில்லை’ ..பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங்
டெல்லி: பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில். 'மிக நீண்ட பட்ஜெட். என்னால் உட்கிரகிக்க முடியவில்லை' என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020-21 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து 2 மணி நேரம், 40 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் எடுத்து உரையாற்றினார்.
இந்த பட்ஜெட் குறித்து பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், "பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பொருளாதாரத்தை முற்றிலும் கைவிட்டுவிட்டதை உணர்த்துவதை போலவே இன்றைய பட்ஜெட் அறிவிப்புகள் அமைந்திருக்கிறது. நிதி பிரச்சனைகளுக்கு பட்ஜெட்டில் தீர்வுகள் எதுவும் இல்லை என்றார்.
மத்திய பட்ஜெட்டுக்கு உங்கள் மார்க் என்ன என்று கேட்டபோது, 10 என்ற இலக்கத்தில் 1-ம் உள்ளது 0-ம் உள்ளது, எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.
இந்து பயங்கரவாதம் உருவாகும்.. திமுகவை சர்ச்சைக்குரிய வகையில் சாடி ராஜேந்திர பாலாஜி பகீர் பேச்சு
இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில். 'மிக நீண்ட பட்ஜெட். என்னால் உட்கிரகிக்க முடியவில்லை' என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார்.