டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்த விவசாயிகள்... சங்க கொடியேற்றி போராட்டம்!
டெல்லி: டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் சென்று வரும் விவசாயிகள் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டையை வந்தடைந்தனர்.
Recommended Video
ஒரு சில விவசாயிகள் செங்கோட்டையின் கோபுரங்களில் ஏறி கொடியை ஏற்றி உள்ளனர்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணியை திட்டமிட்டபடி விவசாயிகள் தொடங்கினார்கள். சில விவசாயிகள் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
ஆனாலும் தடுப்புகளை போலீசார் மீது எறிந்த விவசாயிகள் முன்னோக்கி சென்றனர். இதன் காரணமாக விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்தினார்கள்.
சிலர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினார்கள். 7 பஸ்கள் மற்றும் சில போலீஸ் வாகனங்களில் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. டெல்லி முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருவதால் தலைநகர் போர்க்களம்போல் உள்ளது. இந்த் நிலையில் பாதை மாறி டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் சென்று வரும் விவசாயிகள் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டையை வந்தடைந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க டெல்லி செங்கோட்டையை கைப்பற்றிய விவசாயிகள்... அணி, அணியாக திரள்கின்றனர்!
டெல்லி செங்கோட்டையில் குடியரசு தினம் அன்று வழக்கமாக முப்படை பேரணி நடைபெறும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டையை விவசாயிகள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கோட்டை முன்பு விவசாயிகள் அணி, அணியாக திரண்டுள்ளனர். அங்கு டிராக்டர்களில் பேரணியாக செல்கின்றனர் .ஒரு சில விவசாயிகள் செங்கோட்டையின் கோபுரங்களிலிருந்து விவசாயிகள் சங்க கொடியை ஏற்றி உள்ளனர். இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.