மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்லும் நம் தேசம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு
டெல்லி: மேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி நம் தேசம் மெதுவாக செல்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அதாவது இந்தியாவில் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளதைதான் அக்கட்சி அவ்வாறு கூறியுள்ளது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் ஒருவர் கடத்தப்பட்டு 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் எரித்தும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஷாம்ஷத்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
லாரி டிரைவர்களான முகமது ஆரிப், சென்னகேசவலு, ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கொலையை எப்படி நிகழ்த்தினார்கள் என்பதை நடித்து காட்ட சம்பவம் நடந்த இடத்துக்கு 4 பேரையும் அழைத்து சென்றனர்.
அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்ததாக 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று மக்களவையில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மவுனமாக இருக்கிறார். மேக் இன் இந்தியாவிலிருந்து இந்தியா மெதுவாக ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்கிறது என கூறினார்.