11 வருடங்களில் மிக மோசம்.. இந்தியாவின் 2019-20 ஜிடிபி 4.2% ஆக சரியும்.. புள்ளியியல் அமைச்சகம் ஷாக்!
டெல்லி: 2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது .
இந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியிட்டும் பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருளாதாரத்தில் திடீர் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து 2019-2020ம் ஆண்டுக்கான ஜிடிபி 4.2% ஆக இருக்கும் என்று மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் வரை மூன்று மாதங்களுக்கான ஜிடிபி 3.1% ஆக உள்ளது. ஆனால் இந்த மூன்று மாத ஜிடிபி சதவிகிதம் மத்திய அரசு கணித்ததை விட அதிகம் என்று கூறுகிறார்கள். ஆனால் மொத்த ஜிடிபி கணிப்பு மோசமாக சரிந்துள்ளது .
ஏழைகளுக்கு ரூ.2500, ஜிஎஸ்டி, வருமான வரி தள்ளுபடி.. தொழில் நிறுவனங்கள் எதிர்பார்ப்பு இவைதான்
4.2% ஜிடிபி என்பது மிக மோசமானது ஆகும். கடந்த 11 வருடங்களில் இந்தியாவின் மிக மோசமான ஆண்டு ஜிடிபி இதுதான் என்று கூறுகிறார்கள். கடந்த 2018-19 ஆண்டுக்கான 6.1% ஆக இருந்தது. வேகமாக ஜிடிபி உயர்ந்த நிலையில் தற்போது வேகமாக மொத்தமாக ஜிடிபி சார்ந்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்பட்ட லாக்டவுன் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இதற்கு முன் இந்தியாவின் ஆண்டு ஜிடிபி விவரம்:
2010-11: 8.5
2011-12: 5.24
2012-13: 5.46
2013-14: 6.39
2014-15: 7.41
2015-16: 8
2016-17: 8.26
2017-18: 7.04
2018-19: 6.12
2019-20: 4.2 (கணிப்பு)