டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார்- சென்னை பல்கலை.யில் படித்தவர்!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவானே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராணுவ தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவர் நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

General Manoj Mukund Naravane takes over as the 28th Chief of Army Staff

இதனையடுத்து ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றார். அவரிடம் பிபின் ராவத் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

தேசிய பாதுகாப்பு அகாடமி, ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சியை முடித்தவர் மனோஜ் முகுந்த் நராவனே. சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான முதுகலை பட்டம் படித்தவர்.

General Manoj Mukund Naravane takes over as the 28th Chief of Army Staff

1980ல் சீக்கிய காலாட்படையில் ராணுவத்தில் இணைந்தார். ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் போராளி குழுக்களை ஒடுக்குவதில் முதன்மை பங்காற்றியவர் நராவனே. ராணுவத்தின் கிழக்கு படை பிரிவுக்கு தலைமை வகித்தவர் நராவனே.

English summary
General Manoj Mukund Naravane takes over as the 28th Chief of Army Staff, succeeding General Bipin Rawat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X