டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்!

Google Oneindia Tamil News

டெல்லி: பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் இறங்கி நீச்சல் அடிப்பதை பார்த்த அவரது வளர்ப்பு நாய் அவர் நீரில் தத்தளிப்பதாக கருதி அவரது முடியை பிடித்து இழுத்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாய் என்பது நன்றியுள்ள ஜீவன் என்பது வழக்கம். நாம் செய்த உதவியை மறந்து யாராவது நமக்கு துரோகம் செய்தால், நாய் கூட நன்றியுடன் இருக்கிறது, 6 அறிவுள்ள நீ அவ்வாறு இல்லாமல் போய்விட்டாயே என கூறுவோம்.

German Shepherd saves life of a lady

அதன்படி நாய், பசு உள்ளிட்ட வீட்டு விலங்குகள் எப்போதும் தனது எஜமானர்களுக்கு விசுவாசமாகவே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் ஒரு நீச்சல் குளத்தில் பெண் ஒருவர் நீச்சல் அடிக்கிறார். அப்போது ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த நாய் ஒன்று தண்ணீரில் இறங்குகிறது.

பின்னர் அந்த பெண்ணின் முடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்து வந்து கரை சேர்க்கிறது. இதை காணும் அந்த பெண் சிரித்து கொண்டே தனது செல்லநாய் தன் மீது பாசம் வைத்துள்ளதை எண்ணி பூரிப்படைகிறார்.

English summary
A video goes viral that a German Shepherd saves life of a lady in Swimming Pool. When a lady going for swimming, the dog wrongly thought that she was in trouble.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X