உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.97 லட்சமாக உயர்வு
டெல்லி: உலகளவில் கொரோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
Recommended Video
உலக நாடுகளை ஒன்றிணைத்து கொரோனா என்ற வைரஸ் தன்னை எதிர்த்து போராட வைக்கிறது. கொடூர கொரோனாவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10.97 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் பலியானோரின் எண்ணிக்கை 59,131 பேராக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 2,25,942 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,76,995 ஆகவும், இத்தாலியில் 1,19,927 ஆகவும், ஸ்பெயினில் 1,19,199 ஆகவும், ஜெர்மனியில் 91,159 பேராகவும் , சீனாவில் 82,511 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில் 81 பேருக்கு கொரோனா.. எந்தெந்த ஏரியாக்களில் வைரஸ் பாதிப்பு.. முழு விவரம் இதோ..
அது போல் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 14,681 ஆகவும், ஸ்பெயினில் 11,198 ஆகவும், பிரான்ஸில் 6.507 ஆகவும், பிரிட்டனில் 3,605 ஆகவும் உயர்ந்துள்ளது. நியூயார்க்கில் மட்டும் 1,867 பேர் பலியாகிவிட்டனர்.