உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23.17 லட்சமாக உயர்வு
டெல்லி: உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,17,739 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா எனும் தொற்றுநோயில் சிக்கி உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பெரும் பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.
இந்த நோய்க்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,17,739 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 1,59,510 ஆக உயர்ந்தது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,32,197 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 39 ஆயிரமாக ஆனது.
ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,91,726 ஆனது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 20,043 ஆக உயர்ந்தது.
கொரோனா வைரஸ் லாக் டவுன் - தஞ்சை, திருவண்ணாமலை கோவில் சித்திரை திருவிழா ரத்து
Recommended Video
அதுபோல் தொற்று நோய் பரப்பும் மையாக கருதப்பட்ட இத்தாலியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,75,925 ஆக உயர்ந்துள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 23,227 ஆனது. பிரான்ஸில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,49,149 ஆக உயர்ந்துள்ளது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 19,323 ஆனது.