திருமணத்திற்கு செல்லும் போது மாப்பிள்ளைக்கு துப்பாக்கி சூடு.. கையில் பாய்ந்த குண்டுடன் டும் டும்!
டெல்லியில் திருமணத்திற்கு சென்ற மாப்பிள்ளையை மர்ம நபர்கள் சுட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் திருமணத்திற்கு சென்ற மாப்பிள்ளையை மர்ம நபர்கள் சுட்டதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மதன்கீர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமண மண்டபத்திற்கு மிக அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
[ஓங்கிய பெரும் காடு.. அதன் நடுவே.. ஒரே ஒரு மனிதன்.. ஜானை விடுங்க, இவரைத் தெரியுமா? ]
துப்பாக்கி
அந்த மாப்பிள்ளையின் விவரங்கள் வெளியாகவில்லை. அவர் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் திருமண மண்டபம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கூட்டத்தில் இருந்த இரண்டு பேர் முகத்தை மூடிக்கொண்டு வாகனம் மீது ஏறியுள்ளனர். மாப்பிள்ளையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்றனர்
கல்யாண மாப்பிள்ளையை இரண்டு முறை சுட்டுவிட்டு, எஸ்கேப் ஆகிவிட்டனர். இந்த நிலையில் மாப்பிள்ளையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த குண்டு அவரது தோள்பட்டையில் சிக்கி இருந்துள்ளது. அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை பார்க்கப்பட்டது.
சிறிய தையல்
ஆனால், குண்டை அகற்ற பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பதால், உடனடியாக ஆபரேஷன் செய்ய முடியாது என்றுள்ளனர். அதே சமயம் இப்போது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் அவருக்கு சிறிய தையல் போட்டு, துணியை வைத்து கட்டு மட்டும் போடப்பட்டது.
திருமணம் நடந்தது
அதன்பின் கையில் குண்டுடன் மாப்பிள்ளை 3 மணி நேரம் கழித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த துப்பாக்கி சூடு எதனால் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.