இணைய வேகம் தாறுமாறாக அதிகரிக்கும்.. நாளை மறுநாள் செலுத்தப்படுகிறது ஜிசாட்-11 சாட்டிலைட்!
ஜிசாட்-11 செயற்கைக் கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டெல்லி: ஜிசாட்-11 செயற்கைக் கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
ஆனால் பல்வேறு காரணங்களால் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, 5854 கிலோ எடையில் ஜி சாட்-11 செயற்கைக்கோள் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் முழுமையாக வெற்றி அடையாத நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி சாட்-11 செயற்கைக்கோளில் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கி உள்ளனர்.
ஆனால் இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படவில்லை. இது பிரான்ஸ் எடுத்து செல்லப்படுகிறது.
பிரெஞ்சு கயனாவில் இருந்து ஏரைன்-5 ராக்கெட் மூலம் ஜி சாட்-11 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்தப்படும்.