கடவுள் செயல்.. கையை பிசைந்த நிர்மலா சீதாராமன்! ரிசர்வ் வங்கி பக்கம் திரும்பிய பார்வை.. மாஸ் பிளான்!
டெல்லி: மாநிலங்களின் ஜிஎஸ்டி பங்கை தர முடியாமல் கையை பிசையும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுமாறு 'அறிவுரை' வழங்கி உள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 வது கூட்டத்தில், மாநிலங்களின் இழப்பீடு பற்றாக்குறையான ரூ .2.35 லட்சம் கோடியாக தீர்க்க இரண்டு வாய்ப்புகளை வழங்கி உள்ளது. நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 'கடவுளின் செயல்' என்று கொரோனா தொற்றுநோயை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தில் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் பெற்று கொள்ளுங்கள் என மாநில நிதி அமைச்சர்களிடம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். ஐந்து மணி நேரம் நடந்த கூட்டத்தின் முடிவில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசிய மாநில நிதியமைச்சர், இது தெளிவு இல்லை என்று தெரிவித்தனர். ஜிஎஸ்டி அமலாக்கம் மற்றும் தொற்றுநோயால் வருவாய் பற்றாக்குறையை வேறுபடுத்துவதற்கான நடவடிக்கை "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று கூறினார்கள்.
கொரோனா என்பது கடவுளின் செயல்.. ஜிஎஸ்டியில் வருவாயில் பெரிய சரிவு.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!
ரூ.97,000 கோடி கடன்
ஜிஎஸ்டி பங்கு இழப்பீட்டை சரிகட்ட மாநிலங்களுக்கு இரண்டு வாய்ப்புகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. முதல் ஆப்சன், இந்திய ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தவுள்ள சிறப்பு திட்டத்தின் கீழ் குறைந்த வட்டி விகிதத்தில் மாநில அரசுகள் ரூ.97,000 கோடி வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். 2022 ஆம் ஆண்டு இந்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
ரூ .2.35 லட்சம் கோடி
இரண்டாவது ஆப்சன், ஜிஎஸ்டி வசூல் தடுமாற்றம் மற்றும் தொற்றுநோயால் ஏற்படும் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு கொண்டுவரும் சிறப்பு கடன் சாளரத்தின் கீழ். முழு பற்றாக்குறையான ரூ .2.35 லட்சம் கோடியை கடன் வாங்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இரு திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்க மாநிலங்களுக்கு மததிய அரசு ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.
முழு இழப்பீடு வேண்டும்
இதனிடையே கொரோனா காரணமாக உண்மையான ஜிஎஸ்டி இழப்பீடு மற்றும் கொடுக்கப்படும் இழப்பீடு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் குறிப்பிட்டு விமர்சித்தார்.: "அவர்கள் தர வேண்டிய இழப்பீட்டைக் குறைக்கிறார்கள். அரசியலமைப்பற்ற வேறுபாட்டைக் கொண்டு வருகிறார்கள்... கூட்டத்தில் கடுமையான கருத்து வேறுபாடுகள் இருந்தன. எனது கருத்துக்களை முன் வைத்தேன். . மாநிலங்கள் கடன் வாங்குவது குறித்து பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் முழு இழப்பீடும் செலுத்தப்பட வேண்டும்.
ஏற்க முடியாது
மொத்தம் ரூ .2.35 லட்சம் கோடியை கடன் வாங்க வேண்டுமானால் மாநிலங்களின் எஃப்.ஆர்.பி.எம் வரம்பை குறைந்தபட்சம் 1.5 சதவீத புள்ளிகளால் உயர்த்த வேண்டும். மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்காவிட்டால் நாங்கள் எந்த விருப்பத்தையும் ஏற்க மாட்டோம். கடன் வாங்கும் வரம்பில் அதிகரிப்புடன் முழு கடன் வாங்குவதற்கும் இடமளிக்க வேண்டும் " இவ்வாறு கூறினார்.
குரல் எழுப்பிய மாநிலங்கள்
இதனிடையே கடன் வாங்குவது தொடர்பான சட்டபூர்வமான கருத்து மற்றும் இழப்பீட்டு நிதி குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதம் அதிகமாக இருந்தது. பெரும்பாலான மாநில அமைச்சர்களை வருவாய் இடைவெளியைக் குறைக்க கடன் வாங்குமாறு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கோவா, அஸ்ஸாம் தவிர அனைத்து மாநிலங்களும் கடன் வாங்க வேண்டும் என்று விரும்பின. பாஜக ஆளும் மாநிலங்கள் இதை சாதாரணமாக கூறின, மற்ற மாநிங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு கேட்டு பலமாக குரல் எழுப்பின. மாநிலங்கள் தியாகம் செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே முடியாது என்று ஒரு மாநில நிதியமைச்சர் கூட்டத்தில் கடுமையாக பேசினார்.
அடமானம் வைப்பதா?
பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் கூறும் போது, கொரோனாவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என நாம் ஏன் வேறுபடுத்த வேண்டும்? இழப்பீடு மற்றும் நிதி குறித்து விவாதங்கள் கூட்டத்தில் நடந்தன, கூட்டத்தின் முடிவில் மத்திய அரசு கடன் வாங்கி கொள்ளுமாறு இரண்டு ஆப்சன்களை முன்வைத்தது. ஆனால் கடன் வாங்குவது" எதிர்காலத்தை அடமானம் வைப்பது ஒப்பானது" என்றார்.
சுமை ஏற்படாது என்று பேச்சு
இருப்பினும், பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி மத்திய அரசின் கடன் ஆப்சன்களை வரவேற்றார். அவர் கூறும் போது "இரண்டு திட்டங்களும் வரவேற்கத்தக்கவை ... வட்டி மற்றும் மாநிலங்கள் செஸ் நிதியில் இருந்து செலுத்தப்படுவதால் மாநிலங்களுக்கு சுமை ஏற்படாது. மத்திய அரசிடம் கடன் வாங்குவது நல்லது என்று மாநிலங்கள் விரும்பின, ஆனால் இப்போது மாநிலங்கள் கடன் வாங்க வேண்டியிருந்தாலும், கருவூலத்தில் எந்தவிதமான சுமையும் இருக்காது. அவர்கள் திருப்பிச் செலுத்துதல் அல்லது வட்டி செலுத்துதல் செய்ய வேண்டியதில்லை, எனவே, அரசின் கருவூலத்திற்கு சுமை ஏற்படாது "என்று அவர் கூறினார்.
கூடுதல் செஸ் வரி
இப்படி சுஷில் குமார் மோடி சொல்ல முக்கியமான காரணமும் உள்ளது . ஏனெனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கூற்றுப்படி, வாங்கிய கடனுக்கான தொகை ஒவ்வொரு பொருளின் கூடுதல் வரி விதித்து, வாங்கிய கடனை ஐந்து வருடத்தில் திருப்பி செலுத்தலாம். கூடுதல் வரி விதிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
எந்த கண்டிசனும் இல்லை
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு எஃப்.ஆர்.பி.எம்மில் 0.5 சதவீதம் தளர்வு மற்றும் கூடுதல் ஊக்கத்தொகையுடன், ரூ .97,000 கோடி கடன் அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். 'ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு' உலகமயமாக்குதல், வியாபாரம் செய்வதில் எளிமை, மின் விநியோகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் பெருக்குதல் போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தொற்றுநோய் தொகுப்பின் ஒரு பகுதியாக முன்னர் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளும் இதற்கு இல்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்
நன்மை தீமைகள் தெரியவில்லை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இரண்டு விருப்பங்களிலும் வேறுபட்ட அம்சங்கள் குறித்து சில தெளிவின்மை இருந்தது, பல மாநிலங்கள் நன்மை தீமைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. FRBM பிரிவு தொடர்பான விவரங்கள். எந்த விவரங்களும் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்படவில்லை.
வருவாய் வளர்ச்சி
கூட்டத்திற்குப் பிறகு, நிதிச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே பேசுகையில், தொற்றுநோய் இல்லாத நிலையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் வருவாய் பற்றாக்குறை ரூ .97,000 கோடியாக இருக்கும். மாநிலங்களின் பாதுகாக்கப்பட்ட வருவாய் வளர்ச்சி ஆண்டு தோறும் 14 சதவீதமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வளர்ச்சி இருக்கும்.
கூடுதல் செஸ் வரி
தொற்றுநோயால் மாறிஉள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் ஜிஎஸ்டி அமலாக்க பிரச்சினைகள் காரணமாக மாநிலங்களின் உரிமையில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறை ரூ .2.35 லட்சம் கோடியாகும்.. பாதுகாக்கப்பட்ட வருவாய் மற்றும் மாநிலங்களின் ஜிஎஸ்டிக்கு இடையிலான இடைவெளி இந்த நிதியாண்டில் ரூ .3 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதன் ஒரு பகுதியான ரூ .65,000 கோடி ரூபாய் கூடுதல் செஸ் வரி மூலம் வசூலிக்கப்படும், இதன் முடிவில் மாநிலங்களின் இழப்பீடு பற்றாக்குறையாக ரூ .2.35 லட்சம் கோடி இருக்கும். ஜூலை 2017 முதல் 2022 ஜூன் வரையிலான இந்த ஐந்தாண்டு காலத்திற்கு பின் கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்" என்றார்.
இந்தாண்டு மட்டுமே செல்லும்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மாநிலங்கள் முதல் விருப்பத்தைத் தேர்வுசெய்தாலும், அடுத்த ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை பாதுகாக்கப்படும், ஆனால் ஜிஎஸ்டியின் ஐந்து ஆண்டுகள் முடிந்தபின் வசூலிக்கப்படும் செஸ் வரியில் இருந்து செலுத்த வேண்டும். கடன் வாங்கும் திட்டம் இந்த ஆண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும், மேலும் பணம் செலுத்துவதை தீர்மானிக்க அடுத்த நிதியாண்டில் வருவாய் நிலையை கவுன்சில் மதிப்பாய்வு செய்யும்.
ஒரே அளவில் வட்டி
ரிசர்வ் வங்கியுடன் பேசுவதற்கும், அனைத்து மாநிலங்களுக்கும் ஜி-நொடி இணைக்கப்பட்ட (விகிதாச்சார எண்ணிக்கையிலான ஆண்டுகள்) விகிதத்தில் அதைப் பெறுவதற்கும் நாங்கள் உதவுவோம், இதனால் ஒவ்வொரு மாநிலமும் கடனுக்காக ஓடிச் சென்று வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அனைத்து மாநிலங்களும் ஏறக்குறைய ஒரே வட்டி விகிதத்தில் கடன்களைப் பெற மத்திய அரசு உதவும்" என்றார்.