டெல்லி விவசாயிகள் போராட்டம்- டிராக்டரில் இருந்து தவறி விழுந்து ஹரியானா விவசாயி மரணம்
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடைபெறும் பகுதியில் டிராக்டர் ஒன்றில் தவறி விழுந்து ஹரியானா மாநில விவசாயி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் என 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் காசிப்பூர், திக்ரி, சிங்கு எல்லைகளில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திக்ரி எல்லையில் ஹரியானா விவசாயி ஒருவர் டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments
agri laws delhi farmers protest delhi protest விவசாய சட்டங்கள் வேளாண் சட்டங்கள் டெல்லி விவசாயிகள் போராட்டம் டெல்லி போராட்டம்
English summary
A Haryana farmer dies at Delhi Tikri border Protest site.
Story first published: Tuesday, February 9, 2021, 16:20 [IST]