அடுத்த 3 நாட்கள் முக்கியம்.. நாடு முழுக்க.. தீவிர கனமழை பெய்ய போகிறது.. எங்கு எல்லாம் தெரியுமா?
டெல்லி: இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பின்படி அடுத்த 2-3 நாட்களுக்கு தீவிர அல்லது மிக தீவிர கனமழை பெய்யும். வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும்.
வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அரபிக்கடலில் லேசான காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் ஈரப்பதம் நிலவி வருகிறது.
இடுக்கி நிலச்சரிவு.. 8வது நாளாக மீட்பு பணி.. 55ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. மேலும் ஒரு உடல் மீட்பு
மழை தீவிரம்
இதனால் நாடு முழுக்க பல இடங்களில் தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வடஇந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் மிக தீவிரமான கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்திய இந்தியாவில் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
எங்கு பெய்யும்
இமாச்சல பிரதேசம் , உத்தரகாண்ட் , பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தர பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இங்கு இன்று மாலையில் இருந்து தீவிரமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தீவிரமாக மழை பெய்துவிட்டு, பின் போக போக மழை அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
இடி மின்னல்
அதேபோல் மிக மோசமான இடி மின்னல் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற பகுதியை பொறுத்தவரை குஜராத், கோவா , கொங்கணி, மகாராஷ்டிரா ஆகிய பகுதியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும். அதிலும் மகாராஷ்டிராவிலும் குஜராத்திலும் மிக தீவிரமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
தென்னிந்தியா எப்படி
அதேபோல் ஒடிசாவில் அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும்.தென்னிந்தியாவை பொறுத்தவரை ஆந்திர பிரதேசம் தெலுங்கானாவில் தீவிரமான கனமழை பெய்யும். கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் மழை பெய்யும். மேலும் தமிழகத்தில் கடலோர பகுதியில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.