டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் உச்சம்... 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு- 154 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட விவரம்:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 6,977 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 154 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Highest ever spike of 6977 Coronavirus Positive in last 24 hours

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 4021 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 57,721 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இம்மாநிலத்தில் 1,635 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் மொத்தம் 16,277 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா மரணங்கள் 111.

மகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்புமகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு

3-வது இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,056 ஆக உள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 858 ஆகவும் இருக்கிறது.

English summary
According to the Ministry of Health and Family Welfare, Highest ever spike of 6977 Coronavirus cases and 154 deaths in India in the last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X