இந்தியாவில் அதிதீவிரம்- 24 மணி நேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா- 407 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 407 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
உலக நாடுகளில் கொரோவின் பாதிப்பு 1 கோடியை தொடும் நிலையில் உள்ளது. இதுவரை மொத்தம் 97,11,314 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுக்க 3 ஆறுதல் விஷயம் இருக்கு.. கொரோனா எண்ணிக்கையை பார்த்து பயம் தேவையில்லை
5 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு
கொரோனாவால் மொத்தம் 4,91,797 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மிக அதிகமாக உள்ளது. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. பிரேசிலிலிதான் ஒருநாள் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக இருந்து வருகிறது.
24 மணிநேரத்தில் 17,296 பேருக்கு கொரோனா
இந்தியாவில் 24 மணிநேரத்தில் மட்டும் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,90,401.
407 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 407 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15,301 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,741 ஆக உள்ளது. 2-வது இடத்தில் டெல்லி இருக்கிறது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,780 ஆகவும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,977 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 6,931 பேரும் டெல்லியில் 2,429 பேரும் உயிரிழந்துள்ளனர்.