நாகாலாந்து மாநிலத்தை பதற்றமான பகுதியாக அறிவித்தது மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தை பதற்றமான பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து தனித்துவமான வரலாறு உடையது. இந்த மாநிலம் பல ஆண்டுகளாக போர் பதற்றம், தீவிரவாத அச்சுறுத்தல், உள்நாட்ட ஊடுருவல் போன்ற காரணங்களால் அமைதியற்ற சூழ்நிலையில் உள்ளது.
இந்தநிலையில் 1958-ம் ஆண்டு ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தின் கீழ் நாகாலாந்து மாநிலம் முழுவதையும் பதற்றம் நிறைந்த பகுதியாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது,
விவசாயிகளுடனான பேச்சவார்த்தை திருப்தி.. 2 கோரிக்கைளில் ஒருமித்த முடிவு.. வேளாண் அமைச்சர் பேட்டி
அண்மைக்காலத்தில் பதற்றங்க அதிகரிப்பு காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பதற்றமானவை என பிரகடனம் செய்த மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை 6 மாதத்திற்கு அமல்படுத்தி உள்ளது.
இந்தச் சட்டம் அமலில் உள்ள இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும். சந்தேகப்படும் நபர்களை கைது செய்யவும், விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் அதிகாரம் உள்ளது.