டெல்லியில் வீட்டுக்குள் புகுந்த மெகா சைஸ் பல்லி... அலறிய நெட்டிசன்ஸ்!!
டெல்லி: டெல்லியில் ஒரு வீட்டில் மெகா சைஸ் பல்லி ஒன்று நுழைந்து இருக்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக சாலைகள் வெறிச்சோடி இருப்பதால், விலங்குகள் சாலைகளுக்கு வந்தவாறு உள்ளன. அந்த வரிசையில் இந்தப் பல்லியின் புகைப்படமும் டெல்லி வாசிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ஹெச்ஜிஎஸ் தலிவால் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ''டெல்லியில் ஒருவரது வீட்டில் காணப்பட்டது'' என்று பதிவிட்டுள்ளார். நேற்று (9ஆம் தேதி) இந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை 5.6 ஆயிரம் பேர் லைக் செய்து, 1.1 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.
பலரும் தங்களது கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். யாராவது இந்த பல்லியை தங்களது வீட்டில் வளர்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதற்கு இணையாக வீட்டில் வளர்க்கப்படும் நெருப்புக்கோழி படத்தையும் பதிவிட்டுள்ளனர்.
ஆரம்பத்திலேயே விழித்துக் கொண்ட நியூசிலாந்து.. கொரோனா போரில் வெற்றி.. குவியும் பாராட்டு!
ஆரவல்லியில் இருக்கும் சத்ரபூரில் இருந்து இந்த பல்லி வந்து இருக்கலாம், இந்த பல்லி அங்குதான் அதிகமாக காணப்படும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.