வருமானம் கூடப்போகிறது.. வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.. பட்ஜெட்டுக்கு மோடி பாராட்டு
டெல்லி: வேலைவாய்ப்பை அதிகரிக்க கூடிய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தொடர்பாக மோடி தெரிவித்த கருத்து இதுதான்: வேளாண்மை, உள்கட்டமைப்பு, ஜவுளி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை வேலைவாய்ப்பை உருவாக்கும், முக்கிய அம்சங்களாகும். வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக, இந்த நான்கு துறைகளுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த பட்ஜெட் வருமானத்தையும் முதலீட்டையும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன், இது தேவை மற்றும் நுகர்வை அதிகரிக்கும். இது நிதி அமைப்பு மற்றும் கடன் வழங்குதலில், புதிய உந்துதலை கொண்டுவரும். இந்த பட்ஜெட் நாட்டின் தற்போதைய தேவைகளையும் இந்த தசாப்தத்தின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.
தொழில்நுட்ப டெக்ஸ்டைலனுக்கான புதிய கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஃபைபர்களை உற்பத்தி செய்வதற்கு அதன் மூலப்பொருளின் வரி அமைப்பு சீர்திருத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த கோரிக்கை நீடித்து வந்தது. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.