ரயில்களை சேதப்படுத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அன்காடி
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது ரயில்களை சேதப்படுத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்த அறிவுறுத்தியிருப்பதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அன்காடி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போரது ரயில்கள் தீக்கிரையாகின. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அன்காடி கூறியதாவது:
#WATCH Union Min of State of Railways, Suresh Angadi speaks on damage to properties. Says "...I strictly warn concerned dist admn&railway authorities, if anybody destroys public property, including railway, I direct as a Minister, shoot them at sight..." #CitizenshipAmendmentAct pic.twitter.com/VeUpZY7AjX
— ANI (@ANI) December 17, 2019
ரயில்வே சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுவது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ரயில்கள் உட்பட எந்த பொதுச் சொத்துக்கு யார் சேதப்படுத்தினாலும் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இரவிலும் நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்- இளைஞர் காங்கிரசார் மெழுகுவர்த்தி பேரணி
இவ்வாறு சுரேஷ் அன்காடி கூறியுள்ளார்.