இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தீர்கள்? பத்திரிக்கையாளர் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்!
நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, இஸ்லாமியர்களை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் அடைகிறார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை, இஸ்லாமியர்களை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் அடைகிறார்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காரணமாக இந்திய அரசியல் மிக பரபரப்பாக இருக்கிறது. இதுவரை செய்தியாளர்களை சந்திக்காத பிரதமர் மோடி கூட தற்போது செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தனியாக பேட்டி அளித்து இருக்கிறார்.
பிரதமர் மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்து உள்ளார். தேர்தல் தொடர்பான பல முக்கிய கேள்விகளுக்கு மோடி பரபரப்பு பதில்களை அளித்துள்ளார்.
மோடி பேட்டி
ராகுல் காந்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, நான் ஏன் ராகுல் காந்தியை நேரடியாக தாக்கி பேசவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. நான் பெரிய ஆட்களின் பெயர்களை கூற முடியாது. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் மக்களால்தான் இந்த நாட்டின் பிரதமர் ஆனேன். பெரிய நபர்களை பற்றி பேச மாட்டேன்.
இஸ்லாமியர்கள் எப்படி
இஸ்லாமியர்கள் குறித்த கேள்விக்கு, நான் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இந்துக்களுக்கு எதிராகவும் எதுவும் செய்யவில்லை. இரண்டு மதத்திற்கும் நான் எதுவும் தனியாக செய்யவில்லை. நான் மக்களுக்காக பொதுவாக உழைத்தேன். ஆனால் 2022ல் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் வீடுகள் இருக்கும். இந்துவோ, இஸ்லாமியரோ எல்லோருக்கும் வீடுகள் இருக்கும். இஸ்லாமியர்களை அச்சத்தை வைத்து சிலர் வாக்குகளை வாங்க பார்க்கிறார்கள்.
ராமர் கோவில்
ராமர் கோவில் குறித்த கேள்விக்கு, ராமர் கோவில் கட்ட நாங்கள் மட்டும் ஆசைப்படவில்லை. இந்தியாவில் எல்லோரும் ராமர் கோவில் வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். உச்ச நீதிமன்றம் இதில் தீர்வு அளிக்க வேண்டும். தீர்வு அளித்தவுடன் கண்டிப்பாக பணிகளை தொடங்குவோம்.
மாற்றம் கொண்டு வந்தோம்
நாங்கள் கடைசி 60 மாதத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறோம். இளைஞர்கள் இடையே வேலைவாய்ப்பு பெருகி இருக்கிறது. அதைவிட, சுயதொழில் அதிகமாக உயர்ந்து உள்ளது. 60 வருடங்களில் இல்லாத பெரிய வளர்ச்சி ஆகும் இது. இளைஞர்கள் பணியாற்றும் முறையையே நாங்கள் மாற்றி இருக்கிறோம், என்று மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.