நேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் பற்றி உருகிய நண்பர்!
நேற்று இரவு 8.45 மணிக்கு கூட சுஷ்மா சுவராஜ் என்னிடம் நன்றாக போனில் பேசினார், அவரின் மரணத்தை நம்பவே முடியவில்லை என்று சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: நேற்று இரவு 8.45 மணிக்கு கூட சுஷ்மா சுவராஜ் என்னிடம் நன்றாக போனில் பேசினார், அவரின் மரணத்தை நம்பவே முடியவில்லை என்று சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.
நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார், இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ். இவருக்காக சர்வதேச அரங்கில் அதிகம் குரல் கொடுத்தவர் என்றால், அது முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த சுஷ்மா சுவராஜ்தான்.
ஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்று ஓராண்டு ஆகிவிட்டது இன்று! ஸ்டாலின் கவிதாஞ்சலி!
ஆஜர்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச அரங்கத்தில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வ், சுஷ்மா சுவராஜின் நெருங்கிய நண்பர். இந்த நிலையில் சுஷ்மா சுவராஜின் மரணத்துக்கு தற்போது ஹரிஷ் சால்வ் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
கடைசி வரை
அதில், நான் நேற்று இரவு 8.45க்குதான் போனில் பேசினேன். என்னிடம் மிகவும் நன்றாக எப்போதும் போல பேசினார். அவரின் குரலில் எந்த மாறுபாடும் இல்லை. அவர் என்னிடம் ஒரு ரூபாய் கடன் வைத்து இருப்பதாக கூறினார்.
எப்படி இருந்தார்
குல்பூஷண் ஜாதவ் வழக்கில் வெற்றிபெற்றால் ஒரு ரூபாய் சம்பளம் கொடுப்பதாக நாங்கள் ஒப்பந்தம் போட்டோம். அதை அடுத்த முறை சந்திக்கும் போது அவர் கொடுப்பதாக கூறினார். ஆனால் தற்போது அது நடக்காமல் போய்விட்டது.
உதவி
வெளிநாட்டில் வாழும் இந்திய மக்களுக்கு உதவி செய்வதற்காக அவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்லக்கூடிய நிலையில் இருந்தார். இந்த இழப்பு எனக்கு தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய இழப்பு. தனிப்பட்ட வகையில் மட்டுமல்ல, நாட்டுக்கே அவரின் இழப்பு மிகப்பெரிய இழப்பு.