அபிநந்தன் நாளை விடுவிப்பு.. டெல்லியில் முப்படை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
Recommended Video
டெல்லி: இந்திய விமானி அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில் இன்று மாலை 5 மணிக்கு என திட்டமிடப்பட்ட முப்படை தளபதிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் சம்பவம் முதலாக இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவுக்குள் ஊடுருவும் பாகிஸ்தான் போர் விமானங்களை வான் வழித் தாக்குதலைக் கொண்டு இந்தியா முறியடித்து வருகிறது.
இந்த முறியடிப்பு நடவடிக்கையின் போது பாகிஸ்தான் வசம் இந்திய விமான படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கிக் கொண்டார். இந்த நிலையில் அவரை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
[Read more: "தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு]
உலக நாடுகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு முப்படைகளின் தளபதிகள் செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டு அது இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.