அந்தமானில் வைத்து சோதனை.. சீறிப்பாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள்.. இலக்கை தகர்த்து வெற்றி
டெல்லி: கடந்த இரண்டு நாட்களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ட்ராக் தீவில் வைத்து, 2 பிரம்மோஸ் தரையிலிருந்து தரைப்பகுதி இலக்கை குறி வைத்து தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) செவ்வாய்க்கிழமையான இன்று, தெரிவித்துள்ளது.
அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வழக்கமான செயல்பாட்டு பயிற்சியின் ஒரு பகுதியாக, இரட்டை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று ஐ.ஏ.எஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏவுகணை 300 கி.மீ தூரத்திற்கு சென்று, இலக்கை சரியாக தாக்கி அழித்தது. இரண்டு முறையும், இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடந்தது. இவ்வாறு விமானப்படை தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்திய விமானப்படை, ஒடிசா மாநிலத்தில்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது வழக்கம். இந்த முறை அந்தமான் தீவில் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச் சூடு.. ராணுவ அதிகாரி வீர மரணம்