Breaking News Live: இழுத்தடிப்புக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் வீர மகன் அபிநந்தன்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று முதல் நாள் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நேற்று திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசினார். அதில் அமைதியை கருத்தில் கொண்டு நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானியை விடுவிக்க போகிறோம் என்று கூறினார். அதன்படி இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இன்று மதியம் 12 மணியளவில் உரிய மரியாதையுடன் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சற்று முன்பாக அபிநந்தன் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார்
அபிநந்தனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது- கபூர் பேட்டி
Air Vice Marshal RGK Kapoor at Attari-Wagah border: Wing Commander #AbhinandanVarthaman has been handed over to us. He will now be taken for a detailed medical checkup because he had to eject from an aircraft. IAF is happy to have him back. pic.twitter.com/ZaaafjUQ90
— ANI (@ANI) March 1, 2019
தீவிர இழுபறிக்கு பிறகு இரவு 9.20 மணிக்கு இந்திய எல்லைக்குள் வந்தார் அபிநந்தன்
IAF Wing Commander #AbhinandanVarthaman at Wagah-Attari border, to cross border soon to enter India. pic.twitter.com/a1hVjwroVw
— ANI (@ANI) March 1, 2019
திருவிழா கூட்டம் போல வாகா எல்லையில் மக்கள் கூடுகிறார்கள்
அபிநந்தன் இன்று மதியம் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட உள்ளார்
அபிநந்தன் வருகை காரணமாக பாதுகாப்பு அதிகரிப்பு
Visuals from the Attari-Wagah border. Wing Commander #AbhinandanVarthaman will be released by Pakistan today. pic.twitter.com/6x30IQpqbB
— ANI (@ANI) March 1, 2019
பாகிஸ்தானில் அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்
நல்லெண்ண அடிப்படையில் பாக். அரசு அபிநந்தனை விடுவிக்கிறது
அபிநந்தனை இன்று விடுவிக்க போவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்தார்
அபிநந்தன் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்
நேற்று மாலையில்தான் 1 விமானி மட்டுமே தங்களிடம் இருந்ததாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது
பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது
ரஜோரி கிழக்கு பகுதியில், எப் 16 விமானத்தில் பயன்படுத்தப்படும் ஏவுகணை மீட்கப்பட்டது
இந்திய விமானப்படை எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது
விங் கமாண்டர் அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் கூறியுள்ளதற்கு வரவேற்கிறோம்
Visuals of cover of AARAM missile fired from Pakistani F-16 aircraft found near the LoC in India pic.twitter.com/qHdOm5cDqN
— ANI (@ANI) February 28, 2019
ரஜோரி பகுதியில் எல்லையை கடந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் வந்தன
மிக் 21 பைசன், மிராஜ் 2000 உள்ளிட்ட இந்திய விமானங்கள் அவற்றை வழி மறித்தன
பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய நிலைகளை குறி வைத்து தாக்கின
பாகிஸ்தான் விமானப்படையால் எந்த சேதத்தையும் விளைவிக்க முடியவில்லை
பாகிஸ்தானின் எப் 16 விமானம், மிக் 21 பைசன் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது
இந்திய விமானப்படையின் மிக் 21 விமானம் மாயமானது
இந்திய விமானி பாராசூட்டில் பாக் எல்லைக்குள் குதித்தபோது அந்த நாட்டு ராணுவத்தால் பிடிபட்டார்
WATCH: Joint press briefing by the Army, Navy and the Air Force in New Delhi https://t.co/SooRKNi5T1
— ANI (@ANI) February 28, 2019
நாங்கள் அமைதியான நாடாக இருக்கவே விரும்புகிறோம் - இம்ரான் கான்
எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் - இம்ரான் கான்
இந்தியாவில் விளையாட பலமுறை நான் சென்று இருக்கிறேன் - இம்ரான் கான்
இந்தியாவின் அரசின் செயல்கள் அங்கு பலருக்கு பிடிக்கவில்லை என்பது தெரியும் - இம்ரான் கான்
இந்திய அரசின் சில செயல்பாட்டில் குற்றம் இருப்பதை இந்தியர்கள் புரிந்துகொள்வார்கள் - இம்ரான் கான்
புல்வாமா தாக்குதல் போன்ற மோசமான தாக்குதலை எந்த நாடாவது நடத்துமா? - இம்ரான் கான்
புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியா முன்பே ஆதாரங்களை அளித்து இருக்கலாம்
முன்பே அப்படி செய்திருந்தால் பிரச்சனையே ஏற்பட்டு இருக்காது - இம்ரான் கான்