ஏழ்மையை நோக்கி பல லட்சம் பேர்.. மேலும் 3 மாதம் இலவச தானியம் வழங்குக- மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
டெல்லி: பல லட்சம் மக்கள் ஏழ்மைக்கு தள்ளப்படும் நிலைமை உள்ளதால், இலவச உணவு தானியம் வழங்கும் நடைமுறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் மற்றும் தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்.
"2020 ஏப்ரல், ஜூன், முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் / நபர் / மாதங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடு ஆகியவை, கூடுதலாக, லாக்டவுன் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு எந்தவொரு மத்திய அல்லது மாநில பி.டி.எஸ் திட்டத்தின் கீழ் வராத புலம்பெயர்ந்தோருக்கு 5 கிலோ / நபர் / மாதத்திற்கு இலவச உணவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச உணவு தானியங்களுக்கான ஏற்பாட்டை, ஜூலை-செப்டம்பர் வரையிலான மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். பல மாநிலங்களும் இதைக் கோரியுள்ளன. மேலும், கணிசமான எண்ணிக்கையிலான ஏழை குடும்பங்கள் பொது வினியோக அமைப்பிலிருந்து தொடர்ந்து விலக்கப்படுவதால், இதுபோன்ற அனைத்து வீடுகளுக்கும் தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும், " என்று அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரு வேதனை சாதனை.. தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்.. விலை பட்டியல்
பிரதமருக்கு சோனியா காந்தி எழுதும் இரண்டாவது கடிதம் இதுவாகும். முன்னதாக தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை உயர்த்தப்படுவது பற்றி கண்டனம் தெரிவித்து அவர் கடிதம் எழுதியிருந்தார்.
மக்களிடமிருந்து அரசு லாபம் சம்பாதிக்கும் நேரம் இது கிடையாது என்று அவர் கடுமையாக சாடியிருந்தார்.