நீரவ் மோடி பாணி வங்கி மோசடிகளை தடுக்க நடவடிக்கை.. நிர்மலா சீதாரமன் அதிரடி அறிவிப்பு
Recommended Video
டெல்லி: வங்கி மோசடியை தடுக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். பொதுத் துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இன்று நாங்கள் அறிவிக்கப் போகும் நடவடிக்கைகள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாறுவதற்கான எங்கள் குறிக்கோளுக்கு இணங்க இருக்கும். கடன் வளர்ச்சியை உறுதி செய்யும்.
நிதித்துறைக்கு நாங்கள் மிகவும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் அதில் தீவிரமாக இருக்கிறோம்.
ஐஎன்எக்ஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு திங்கள் வரை காவல் நீட்டிப்பு.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி
பெரிய அளவுக்கான கடன்களை அனுமதிப்பதும், கண்காணிப்பதும் தனி பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீரவ் மோடி போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க முடியும். ஸ்விஃப்ட் பரிவர்த்தனைகள் கோர் வங்கி நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன. வங்கி மோசடிகளை குறைக்க இது உதவும்.
In place of fragmented lending capacity with 27 PSBs in 2017, now 12 #PSBs post consolidation. बड़े बैंक अब अपना लक्ष्य रखेंगे global मार्केट पर, मँझले बैंक बनेंगे राष्ट्रीय स्तर के और कुछ बैंक स्थानीय नेतृत्व करेंगे। @PMOIndia @FinMinIndia @PIB_India #PSBsFor5TrillionEconomy pic.twitter.com/Z4dcyZOG5f
— Rajeev kumar (@rajeevkumr) August 30, 2019
கடன் தொகையை திரும்ப பெறுவதில், சாதனை செய்துள்ளோம். மொத்த செயல்படாத கடன்கள் ரூ .8.65 லட்சம் கோடியிலிருந்து ரூ .7.90 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.