சுதந்திர தினம்.. வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மக்கள் கூட்டம் இன்றி நடைபெற்றது!
டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் கூட்டம் இன்றி வாகா எல்லையில் கொண்டாட்டம் நடைபெற்றது.
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலுக்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று கூட்டம் நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய கொடியேற்றி வைத்தார்.
பொதுவாக சுதந்திர தினத்தின் போது வாகா அட்டாரி எல்லையில் காலையில் கொடி ஏற்றப்பட்டு, மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டு வீரர்களின் அணிவகுப்பை காண்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேசிய புதிய கல்விக் கொள்கை 21ம் நூற்றாண்டின் இந்தியாவை வடிவமைக்கும்- மோடி புகழாரம்
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் கூட்டம் இன்றி வாகா எல்லையில் கொண்டாட்டம் நடைபெற்றது. காலையில் ஏற்றுப்பட்ட கொடி மாலையில் கீழே இறக்கப்பட்டது . இந்திய வீரர்கள் வாகா எல்லையில் கொடியை இறக்கிவிட்டு மாஸ் அணிவகுப்பை வீரதீரமாக நடத்தினார்கள்.
ராணுவ வீரர்களின் மிடுக்கான நடையுடன், சல்யூட்டுடன் கோடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.