காஷ்மீரை வேகமாக முன்னேற்றுவோம்.. இனி பெரிய மாற்றம் வரப்போகிறது.. பிரதமர் மோடி சபதம்!
ஜம்மு காஷ்மீரை இனி வேகமாக முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் ஒரே குறிக்கோள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரை இனி வேகமாக முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் ஒரே குறிக்கோள் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுக்க இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. எப்போதும் போல டெல்லியில் கொண்டாட்டங்கள் களைகட்டி இருக்கிறது.
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
முத்தலாக் தடை சட்டம்.. இஸ்லாமிய பெண்களின் விடுதலை மகிழ்ச்சி அளிக்கிறது.. மோடி பெருமிதம்!
கூறியது என்ன
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையியற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், 70 வருடத்தில் செய்ய முடியாததை 70 நாளில் செய்து இருக்கிறோம். காஷ்மீரில் கொண்டு வந்த சீர்திருத்தம் நாங்கள் செய்த சாதனை.
இரண்டு அவைகள்
இரண்டு அவையிலும் எங்களுக்கு எம்பிக்கள் ஆதரவு உள்ளது. இதன் மூலம் நாங்கள் வேகமாக சட்டங்களை இயற்றி வருகிறோம்.காஷ்மீரை முன்னேற்ற 130 கோடி மக்கள் கரம் கோர்த்து இருக்கிறார்கள். லடாக் மக்கள் பெரும் மகிழ்ச்சியியல் உள்ளனர்.
கடமை என்ன
நாம் நமது மிகப்பெரிய கடமையை நிறைவேற்றி விட்டோம். இது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல.
காஷ்மீர் பெண்கள் சரியான அளவில் சுதந்திரம் அடைய வேண்டும். அவர்களுக்கான திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். காஷ்மீரும் இந்தியாவில்தான் இருக்கிறது.
தலித் மக்கள்
இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்கள் உள்ளது. ஆனால் காஷ்மீரில் அப்படி இல்லை. முன்பு காஷ்மீர் அமைதியா இல்லை. அங்கு நிறைய குழப்பங்கள் நிலவியது. ஆனால் இனி காஷ்மீர் மத்திய அரசு மூலம் அமைதியாக இருக்கும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.